வரலாற்றில் இன்று(17.02.2020)… தமிழறிஞர் வையாபுரி மறைந்த தினம் இன்று…

Published by
Kaliraj

பிறப்பு மற்றும் கல்வி:

திருநெல்வேலி மாவட்டம்  சரவணப்பெருமாள் பாப்பம்மாள் தம்பதிகளுக்கு மகனாக அக்டோபர் 12, 1891ல்  பிறந்தார் தமிழறிஞர்  வையாபுரி. இவர்,  பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருநெல்வேலி கல்லூரிப் படிப்பில் சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று சேதுபதி தங்கப்பதக்கம் பெற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

தமிழ்தொண்டு:

தமிழ் தாத்தாஉ.வே.சா.விற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவர் தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வையோடு ஆய்வு செய்தவர். சங்ககால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் காலநிர்ணயம் செய்து உலகிற்க்கு எடுத்துக்கூறினார். கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். ஆனால் வையாபுரிப்பிள்ளையோ தமது ஆய்வின் முடிவுகளை முற்றுப்பெற்றதாகக் கூறவில்லை. மேலும் இவர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்த காலத்தில் மலையாள மொழி லெக்சிகன் பதிப்பிக்கப்பட்டது. இவரின் ஆய்வு மாணவர்தான்  சுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்போது, தமிழின் பழம்பெருமைக்கு எதிரானவர் வையாபுரிப்பிள்ளை என்று திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.  திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் இவர் பெரும்பங்கு வகித்தவர். கம்பனை ஆதரித்தவர் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் ஒருவர் எஸ். வையாபுரிப்பிள்ளை. 1936 முதல் 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை  ஆராய்ச்சி தலைவராகப் பணியாற்றினார்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கிய அவர் 1955ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது ஆவல் மட்டும் இறுதி வரை நிறைவேறாமலே போய்விட்டது. இவர், 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். தமிழ்தொண்டாற்றிய வையாபுரிபிள்ளை மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

27 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago