வைரல்

வேகமாக வந்து மோதிய எஸ்யூவி..தூக்கி வீசப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்..! வைரலாகும் வீடியோ.!

Published by
செந்தில்குமார்

தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார்.

கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது மோதியுள்ளது. இதனால் போலீஸ் கான்ஸ்டபிள் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்த மற்ற போலீசார் விபத்தை ஏற்படுத்திய எஸ்யூவி காரைத் பின்தொடர்ந்து துரத்திச் சென்று, காரின் ஓட்டுனரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இப்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வேகமாக வந்த டிரக் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

59 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago