வானிலை

திடீர் மழை ஏன்.? அடுத்து எங்கு மழைக்கு வாய்ப்பு.? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்..!

Published by
மணிகண்டன்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்துவ வருவதாக வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். 

நேற்று இரவு முதல் திடீரென சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்ததது. இதனால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை குறித்தும், அடுத்த மழைக்கு வாய்ப்பு குறித்தும், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, மீனம்பாக்கத்தில்  16 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழை அளவானது இந்த வருடத்தின் சராசரி மழை அளவை விட குறைவுதான் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.

மேலும், நாளை (20), மற்றும் நாளை மறுநாள் (21) லேசான, இடியுடன் கூடிய மழையானது, திருவள்ளூர், காஞ்சிபரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர்,  டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,

தமிழக குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 2 தினங்களுக்குக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பருவத்தில் பெய்த மழை அளவில், மீனம்பாக்கம் பகுதியில் 73 ஆண்டுகளில் இது  2வது மிகப்பெரிய மழை அளவு எனவும், நுங்கப்ப்பம் பகுதியில் 73 ஆண்டுகளில் 3வது பெரிய மழைஅளவு எனவும் தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

20 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

37 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago