வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும்..! ஐஎம்டி தலைவர் சுனில் காம்ப்ளே

Published by
செந்தில்குமார்

அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும் என ஐஎம்டி தலைவர் சுனில் காம்ப்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார்ஜாய் புயல் இன்று அரபிக்கடலில் இருந்து நகர்ந்து, சௌராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் நாளை மிக தீவிர புயலாக மாறி, குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தை, 150 கிமீ வேகத்தில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிபார்ஜாய் புயல் தற்போது மும்பையில் இருந்து விலகி உள்ளது எனவும், நாளை மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் சுனில் காம்ப்ளே தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

7 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

25 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

48 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago