பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி வழக்கு அமல்!குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை!

- பொறியியல் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு அமலுக்கு வந்தது.
- இதில் நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ என்ற இடத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவி அதே வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.பின்னர் ஆதாரத்தோடு, குற்றத்தை, சிபிஐ நிரூபித்தது.
இந்நிலையில் குற்றவாளி இவர் தான் என்று உறுதியான பிறகு வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் மிஸ்ரா குற்றவாளியான ராகுல்ராஜூக்கு மரண தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025