மக்களின் கவனத்திற்கு.! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் உயர்வு..!

Default Image
  • கோடைகாலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகமாக கூட்டநெரிசல் ஏற்படுகிறது.
  • அதை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை ரூ.10-லிருந்து ரூ.15-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்பட்டு வருகிறது.பெரிய ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தினரை வழி அனுப்ப வருகின்றனர்.இதனால் ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்படுகிறது.

அதிலும் கோடைகாலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகமாக கூட்டநெரிசல் ஏற்படுகிறது.அதை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை ரூ.10-லிருந்து ரூ.15-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மூன்று மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war