சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை இந்த வழக்கில் ADGP ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின்னர், முதல் ஆளாக உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினார். ஆனால், […]
திருவள்ளுவர் :திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுகுழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா,பொதுசெயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ”என் மீது கோபமோ, வருத்தமோ இருந்தால் மன்னித்து விடுங்கள்” என தந்தையிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக தந்தையர் தின வாழ்த்துகளை அன்புமணி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்பொழுது, பொதுகுழு […]
சேலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12, 2025) சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன்12) பாசனத்துக்காக திறக்கப்படுவது இது 20-வது முறையாகும். முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக […]
ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது, ஆனால் அதில் யாரும் இல்லை. மேலும், ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், விமானிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் “தக் லைஃப்” படம் இன்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் வெளியான ”தக் லைஃப்” படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை ஐகோர்ட் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறியும் இணையதளத்தில் படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக […]
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (மே 23, 2025) சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, மற்றும் எம்.பி.க்களான தங்க தமிழ்செல்வன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, அருண் நேரு, தயாநிதி மாறன், […]
சென்னை : திருவான்மியூர் – தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் தரமணி பகுதியில், அடையாறு U-வடிவ பாலத்திற்கு அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் ஒரு சொகுசு கார் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுகாரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால், தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக […]
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா […]
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள் என்று தெலுங்கானாவின் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்த போது முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டியும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரெட்டிக்குச் சொந்தமான […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவர் வருகை புரிந்தது, அங்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு தீவிரம் சேர்த்துள்ளது. இதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுக்களில் மிக முக்கியமானது பிரதமர் மோடி ராஜினாமா பற்றிய செய்திகள். அதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் எனும் இந்துத்துவா அமைப்பானது பாஜகவின் சித்தாந்த அடித்தளமாகவும், […]
சிவகாசி : விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்பொழுது, இந்த விழா மேடையில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிப்பதற்காக வரிசையில் வராமல், முந்திக் கொண்டு வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர […]
சென்னை : தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள நடிகர் அபினய் (43), ‘Liver Cirrhosis’ (கல்லீரலின் சிரோசிஸ்) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வறுமையில் வாடி வரும் அவர் எலும்பும் தோலுமாகவும், வயிறு வீங்கியபடியும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்று வரும் அவர், மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரசனைகளை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். தற்போது வெற்றிபெற்ற பிறகு அதற்கான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு தற்போது வரி விகிதங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு வரியோ, அதே அளவு வரி…, அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு அரசு என்ன இறக்குமதி வரி […]
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் இறுதி தேர்வு அல்லது மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த திருத்தத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை […]
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1மணி வரை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய 7 மாவட்டங்களிலும் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் கனமழையினால் பள்ளிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி இருக்கும்பட்சத்தில் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி […]
ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணிமணி நிலவரப்படி, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக கட்சியும், 35 இடங்களில் காங்கிரஸஸும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. இதில், […]
சென்னை : இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் வந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை 7 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானப்படை வான்வெளி சாக நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 […]
சென்னை : தென் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும், ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் எனவும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு தான் குறையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழையும் அடுத்த 6 நாட்களுக்கும் இதே நிலைமை […]