”ஐயா என்ன மன்னிச்சிடுங்க.., நீங்க 100 ஆண்டுக்கு மேல வாழனும்” – மன்னிப்பு கேட்ட அன்புமணி.!

என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என ராமதாஸிடம், அன்புமணி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Ramadoss Anbumani

திருவள்ளுவர் :திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுகுழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா,பொதுசெயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ”என் மீது கோபமோ, வருத்தமோ இருந்தால் மன்னித்து விடுங்கள்” என தந்தையிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக தந்தையர் தின வாழ்த்துகளை அன்புமணி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்பொழுது, பொதுகுழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”என் மீது கோபம் இருந்தால் ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும். இன்று தந்தையர் தினம், மருத்துவர் ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்துகள். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும் தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், டென்ஷன் ஆகாதீர்கள். நீங்கள் உருவாக்கிய கட்சி இது, இன்று நீங்கள் தேசிய தலைவர், நீங்கள் கோபப்படக்கூடாது.

கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ் .ராமதாஸ் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள், மகனாக நான் செய்கிறேன். நீங்கள் உருவாக்கிய கட்சி இது. உங்கள் கனவுகளை நனவாக்குவோ” என்று பேசியுள்ளார்.

இதனை வைத்து பார்க்கும் பொழுது, இது தந்தை-மகன் இடையேயான மோதலை தற்காலிகமாக தணிக்க முயற்சியாக இருக்கலாம். ஆனால் பாமகவில் உள்ள உட்கட்சி பிளவு முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது 2026 தேர்தலில் கட்சியின் செயல்பாடு மற்றும் கூட்டணி முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்