சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், விஜயகாந்த் இறந்தபிறகு அவருடைய மகன் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்தின் AI மூலமான தோற்றம் இடம்பெற்றுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வரும் காட்சியை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க […]
சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாக இருந்து வருகிறது. படத்தில் அவருடைய நடிப்பை பற்றியும் சொல்லியே தெரியவேண்டாம். ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கதிர் இல்லயாம் அவருக்கு பதிலாக அதர்வா தான் நடிக்கவிருந்தாராம். […]
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். அவர் பேசிய அந்த நாளில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் […]
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரான தினேஷ் மாஸ்டர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. ‘லியோ’ திரைப்படத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஃபைட் மாஸ்டராக மாறியதாகவும் சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள், சங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து, தினேஷ் மாஸ்டருக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து […]
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran) மாரடைப்பால் காலமானார். ஜூன் 2, 2025 அன்று, மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் […]
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் […]
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த தனித்துவமான தயாரிப்பு, டாக்டர் ஸ்குவாட்ச் என்ற இயற்கை சோப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அவருடைய குளியல் நீரில் உருவான அந்த சோப்க்கு “சிட்னியின் குளியல் நீர் பேரின்பம்” (Sydney’s Bathwater Bliss) என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. விலை எவ்வளவு? இந்த சோப்பின் விலை ஒரு பட்டையின் மதிப்பு 8 அமெரிக்க டாலர்கள், […]
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கமல்பேசிய விஷயம் தான் தற்போது அரசியல் வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசியிருந்தார். கன்னட […]
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதனுடைய அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. ஒரு படத்தில் பாடல் கூட இல்லாமலும் ஒரே இரவில் நடக்கும் காட்சிகளை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் படம் கொடுக்க முடியுமா? என லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களை யோசிக்க வைத்தார் என்று சொல்லலாம். முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில், அடுத்த பாகம் […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார். தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் […]
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமாருடனான நகைச்சுவையான உரையாடலைப் பகிர்ந்து, கலகலப்பான பேச்சால் கூட்டத்தை மகிழ்வித்தார். இந்த விழாவில், சரத்குமாரை “அண்ணன்” என்று அன்பாக அழைத்து, அவருடனான நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபோது விமான நிலையத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு […]
டெல்லி : ‘Son of Sardaar’, ‘Jai Ho’ 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் (54) காலமானார்.நடிகர் விந்து தாரா சிங் அவரது மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல் தேவ், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், நேற்று இரவு (23 ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி முகுல் காலமானார் என்று கூறப்படுகிறது. […]
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் போது, நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் மும்பையின் ஆடம்பரப் பகுதியான பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் (மே 20) இரவு சுமார் 7:15 மணியளவில், குமார் சிங் என்ற நபர் பாதுகாப்பைத் […]
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது மகத்தான சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்த கவுரவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம், வரும் ஜூன் 14, 2025 அன்று நடைபெறவுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு பல துறைகளில் சிறந்து […]
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் […]
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை […]
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கடும் காய்ச்சல் காரணமாக அவருடைய முகமே மாறி பேசும்போது கை நடுங்கிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் தான் மற்றபடி எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. அதன்பிறகு விஷால் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பினார். இப்படியான சூழலில் தான் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் […]
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டி கிட்டத்தட்ட வசூல் ரீதியாக ஒரு சுமாரான வெற்றி படமாக மாறியுள்ளது. இருப்பினும் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக […]
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது உணர்ச்சிபூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது விழாவின் வீடியோ கிளிப் ஒன்று, இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், சமந்தா சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவரது கண்களில் கண்ணீர் வருவதையும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. வைரலான வீடியோவைத் தொடர்ந்து, சமந்தா வதந்திகளை தெளிவுபடுத்துவதற்கு […]
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில பிரச்சினைகளால் முடியாமல் உள்ளது. 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்து. அதன்பிறகு, மீண்டும் நிதி திரட்டப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். […]