கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா மீதான மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) தொடர்பான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி மற்றும் நிலம் விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை […]
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ”பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வருத்தம் அடையச் செய்கிறது. […]
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். முன்னதாக, இந்த துயரச் சம்பவத்துக்காக, உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு துயர […]
பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்.சி.பி. பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து பெங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் […]
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் வெற்றி கொண்டாட்டம் இன்று (04.06.2025) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஏராளமான ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிழந்தனர். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் […]
பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், தங்கள் அணி கோப்பை வென்றதை கொண்டாடி தீர்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர். எங்கும் பார்த்தாலும் சிவப்பு ஜெர்ஸியும், ஆர்சிபி வாழ்த்து கோஷங்களும் முழங்குகின்றன. இந்நிலையில் தான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழா பாதியில் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்சிபி […]
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இன்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆர்சிபி அணிக்காக மைதானத்திற்குள் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இறுதியில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் பெரும் துயரமாக மாறிவிட்டது. இதனை காண ஆர்சிபி ரசிகர்கள் எம். சின்னசாமி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் திரண்டதால் கூட்ட நெரிசல் […]
பெங்களூரு : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025 சீசனும் 18 எனும் போது இப்போது முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிராபி வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கோப்பை வென்று பெங்களூர் திரும்பியுள்ள ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, வெற்றிக் கோப்பையுடன் பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு சாலையெங்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக […]
பெங்களூரு : ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட் கோலியின் 18 ஆண்டுகால கனவு நனவானது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் இருந்து பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் குதூகலத்துடன் வரவேற்பு அளித்தனர். ஈ சாலா கப் நம்தே என்பது இந்த ஆண்டு நிஜமாகிவிட்டது எனக் கூறி அவர்கள் பூரிப்படைந்தனர். அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்தடைந்த ஐபிஎல் சாம்பியன்ஸ் ஆர்சிபி அணியை விமான […]
கர்நாடகா : சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதைத் தொடர்ந்து, அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கியது. இவரது இந்த சர்ச்சை கருத்து கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக, முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இதையடுத்து, கடந்த வார வெள்ளிக்கிழமை, கர்நாடக […]
கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், […]
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள் என்று தெலுங்கானாவின் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்த போது முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டியும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரெட்டிக்குச் சொந்தமான […]
கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தனது 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், கர்நாடக பட்ஜெட்டில், காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்த ஐந்து உத்தரவாதத் திட்டங்களுக்கு ரூ.51,034 கோடி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது முதல் கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது […]
கர்நாடகா : அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் PVR-INOX மீது வழக்குத் தொடர்ந்தார். புகார்தாரர் வழக்கில் வெற்றி பெற்றார், PVR-INOX நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் மீது, படம் திரையிடப்படுவதற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பி 25 நிமிட நேரத்தை வீணடித்ததாகவும், அதனால் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்குத் […]
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கண்ட இரு […]
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். அந்த வகையில், இன்று காலையில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், ஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் 2 குழந்தைகளுக்கும் இந்த புதிய HMPV […]
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை […]
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் […]