சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் திமுகவை விமர்சித்தும் மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இன்று மக்களிடம் இருந்து வாங்கும் மனுக்களில் கூட விளம்பரம் தேடும் முதல்வருக்கு கண்டனம் என கூறி தற்போது பொதுத்தேர்தல் நெருங்கி வருவதை மனதில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மனுக்களைப் பெறும் நாடகத்தை அரங்கேற்ற உள்ளதாக தெரிகிறது” எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே தங்கள் அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026இல் மாநிலங்களவை ராஜ்ய சபாசீட் தேமுதிகவுக்கு உறுதியாக வழங்கப்படும் என்று உறுதியளித்த தகவலை பற்றியும் கூறியுள்ளார். ஆனால், முன்னர் 2025இல் சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது இப்போது 2026ஆக மாற்றப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ” […]
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை […]
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும், 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கவும் பாஜகவினருக்கு உத்தரவிட்டார். “நம்பிக்கையோடு பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே” என்று உறுதியாகக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் பேச […]
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரைக்கு அமித்ஷா வருகை தந்தார். வருகை தந்தவுடன் நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி […]
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பதவில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி […]
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க […]
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- […]
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது. எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் […]
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சூழலில், திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக கூட்டணி, வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டு […]
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காலை, மாலை என நடக்கவுள்ள இக்கூட்டத்தில், இன்று 42 மாவட்டங்களின் நிர்வாகிகள், நாளை 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, 2026 தேர்தல், கூட்டணி, தேர்தல் வியூகம், இளைஞர்களை கட்சியில் இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இந்தக் கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக அறிவித்தார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து அரசியல் […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக அறிவித்தார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து […]
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக 4, அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மாநிலங்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து அதிமுகவின் முடிவிற்காக பொறுமையாக காத்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பொறுமை கடலினும் பெரிது” என்று கூறி, இது […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை […]
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்து புகார் அளித்திருந்தார். தான் மட்டுமின்றி பல பெண்கள் இதைப்போல பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பேசியிருந்தார். இதனையடுத்து, தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்திருக்கிறது. ஏனென்றால், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் சென்றது பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க தலைவர் […]