எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

edappadi palanisamy

சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காலை, மாலை என நடக்கவுள்ள இக்கூட்டத்தில், இன்று 42 மாவட்டங்களின் நிர்வாகிகள், நாளை 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

கட்சியின் வளர்ச்சிப் பணி, 2026 தேர்தல், கூட்டணி, தேர்தல் வியூகம், இளைஞர்களை கட்சியில் இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இந்தக் கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இன்று (மே 29, 2025) புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளை (மே 30, 2025) திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியைப் பற்றிய விவாதங்கள், கூட்டணி உத்திகள், மற்றும் பிரச்சாரத் திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் முக்கிய இடம் பெறலாம். மேலும், இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த மற்றும் இளைய நிர்வாகிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும்  முயற்சிகள் ஏற்படுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்