”திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை.., 2026ல் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி” – நயினார் நாகேந்திரன்.!

தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

Nainar Nagendran - eps

நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார்.

இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என அமித் ஷா தெளிவுபடுத்திருந்தார்.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இன்றைய தினம் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 தேர்தலில் ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும்” என கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,” 2026 தேர்தலில் வென்றதும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையு. உடனே பத்ரிக்கையாளர் ஒருவர், கூட்டணி ஆட்சியில் நீங்கள் இடம் பெறுவீர்களா.? என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என பதில் அளித்தார்.

மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பா.ஜ.க. மாநிலத் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியது உண்மை தான், யார் யார் வருவார்கள் என பொறுத்திருந்து பாருங்கள். உடனே பத்ரிக்கையாளர் ஒருவர், அது ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு தற்போது கூற முடியாது என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”எங்கும் மதவாதம் இருக்கக் கூடாது, ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த எல்லாருமே இந்துதானே, இந்து ஒரு மதம் என்று எங்காவது இருக்கிறதா? இது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்