சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். வழக்கமாக எந்த […]
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பு எனவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். தனது உரையாடல்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் எனவும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி பேசியிருந்தார். அவரை தொடர்ந்து தற்போது நதாக ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாஜகவின் […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார். அன்றிலிருந்து இப்போது வரை அதிமுக – பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என பல கருத்துக்கள் உலா வந்ததை அடுத்து, அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான […]
“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணி , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் என கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் […]
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. கூட்டணி இணைந்தது ஒரு பக்கம் விமர்சனங்கள் ஓடி கொண்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி […]
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் போது பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர். இன்று தமிழக பாஜக […]
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக […]
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. எனவே, அவர் எதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து முதல்வருக்கு […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது.அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் பேசப்பட்டாலும், பாஜக தேசிய தலைமை தலைவரை ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டதால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் […]
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் […]
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில் அவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு எதிர்ப்பு வேட்பாளர்கள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் ஏற்கனவே வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று […]
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய தலைமை மூத்த தலைவருமான அமித்ஷாவின் சென்னை வருகை, அதற்கடுத்து காலையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திக்கும் மேலாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியுடன், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகி இந்த விஷயமானது ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான […]
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் உலா வந்தன. அதனை அண்ணாமலையும் மறைமுகமாக உறுதிப்படுத்தி வந்தார். தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் […]
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல அடுத்தடுத்தடுத்த நகர்வுகள் இருக்கிறது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், ஏற்கனவே அதிமுக தலைவர்களுடன் உரசலில் ஈடுப்பட்டுள்ள அண்ணாமலையை மாற்றக்கோரி அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக செய்திகள் […]
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை பற்றிய பேச்சுகளும் அதிகமாக எழுந்துள்ளன. அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் தனித்தனி டெல்லி பயணங்கள், அங்கு பாஜக மூத்த தலைவர்களுடனான சந்திப்புகள் அதன் பிறகான அரசியல் நகர்வுகள் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த சந்திப்புகள் குறித்து அதிமுக மற்றும் பாஜக என இரு தரப்பில் இருந்தும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. […]
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இப்போது, ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் […]
திருநெல்வேலி : 2021 சட்டமன்ற தேர்தல் வரையில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. அதன் பிறகு பாஜக – அதிமுக தலைவர்கள் இடையிலான பல்வேறு கருத்து மோதல்களை அடுத்து பாஜகவுடனான தங்கள் கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. கடந்த வருடம் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. இதில் இரு கட்சிகளுமே தோல்வி அடைந்தன . இதனை அடுத்து மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி வருமா என எதிர்ப்பார்த்த […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் […]