பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி இல்லை என இபிஎஸ் கூறியிருந்த நிலையில், அது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் போது பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர்.
இன்று தமிழக பாஜக
மாநில தலைமையகமான
கமலாலயத்தில் தமிழக
பாஜக மாநில தலைவராக
திரு. நயினார் நாகேந்திரன்
உடன் முன்னாள் மாநில
தலைவர் திரு. அண்ணாமலை
அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன்
பதவியேற்பு விழா சிறப்பாக
நடைபெற்றது… !@annamalai_k pic.twitter.com/CCdEe8WVgs— 𝕾𝖗𝖎𝖕𝖊𝖗𝖚𝖒𝖆𝖑 🚩🚩🚩 (மோடியின் குடும்பம்) (@SriPerumalcdm) April 16, 2025
இதற்கு முன்னதாக பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன்,”கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு பதில் கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும். அன்றைய சூழலில் உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர்,
லேட்டஸ்ட் செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
June 26, 2025