டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. அப்படி இருந்தும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு […]
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த இடங்கள் பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகள் என்று கூட சொல்லலாம். இந்திய வீரர்கள் துணிச்சலாகச் சென்று, துல்லியமாகத் தாக்கி, பயங்கரவாதிகளை ஒழித்தனர். இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு காட்டியது மட்டுமின்றி நமது நாடு பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை […]
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம் என அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தது பேசியிருக்கிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் […]
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி ஊடகமான TRT Word-ன் X தள கணக்கையும் மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் ஒரு ஆங்கில டேப்ளாய்டு செய்தித்தாள் ஆகும், அதே […]
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும், ஜம்முவின் ரஜோரி, உரி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள பொது மக்கள் வீடுகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இன்று காலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா காண்ட் மீது பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக […]
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தாக்குதல் தொடருவதால், பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர் இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி அளித்தது. கடன் வழங்க இந்தியா […]
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை ஏவிய பாகிஸ்தான் தற்போது ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து, டிரோன்களை அனுப்பி ஊடுருவுகிறது. அதாவது, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு எல்லையில் […]
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா […]
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த கடிதம், 1968 ஆம் ஆண்டு குடிமைப் பாதுகாப்பு விதிகளின் பிரிவு 11 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. இது மக்களையும் சொத்துக்களையும் தீங்கு […]
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. இராணுவ விதிகள் 1948 இன் விதி 33 இன் கீழ், எடுக்கப்பட்ட இந்த முடிவு, வழக்கமான இராணுவத்தை கூடுதலாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, இராணுவத் தளபதி இப்போது அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க அல்லது வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபுரிய அழைக்கலாம். மேலும், நாட்டில் […]
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் சூழலில், டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இதில் குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் F16 […]
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் […]
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், ”மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 9 முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆயுதப்படை எடுத்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ கற்பனையிலும் […]
காஷ்மீர் : ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் […]
திரிபுரா : மேற்கு மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிராமவாசி ஒருவராது மீன்குளத்தை தோண்டியபோது, 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 27 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மோட்டார் குண்டுகள் கிடைத்தது குறித்து இந்த தகவலை அறிந்து வந்த, பமுதியா புறக்காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு மற்றும் TSR பணியாளர்கள் அகழாய்வைத் பணியை தொடங்கினர். மொத்தம் 27 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன, இந்த கண்டுபிடிப்பு அடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பை […]