“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 18-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. இந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், சண்டை தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்றும் எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.
அதிபர் டிரம்ப் எங்கு சென்றாலும் சரி இந்தக் கூற்றை முன்வைக்கும் எந்த வாய்ப்பை தவறவிடுவதில்லை போல் தெரிகிறது. பொதுவெளியில் போர் பற்றிய கேள்வி எழுப்பும் போதெல்லாம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை அமெரிக்கா தான் நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் வலியறுத்தி வருகிறார்.
தற்போது, நேட்டோ உச்சிமாநாட்டிற்காக நெதர்லாந்து தலைநகர் ஹேக்கில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது, இதனை மீண்டும் பேசியிருக்கிறார். அங்கு அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தனது தொலைபேசி அழைப்பின் மூலம் மட்டுமே இரு நாடுகளுக்கு (இந்தியா – பாகிஸ்தான்) இடையே அமைதியை நிலைநாட்டியதாகக் கூறியிருக்கிறார்.
முதலில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துவது பற்றி டொனால்ட் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகுதான் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி நிலைநாட்டப்பட்டது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசி கொண்டிருக்கையில், ”இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன், அணுசக்திப் போரைத் தடுத்தேன். நான் சொன்னேன், ‘பாருங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால்… அது மிகவும் மோசமாக இருக்கும், கடைசி தாக்குதல் எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அது உண்மையில் மிகவும் மோசமாக இருந்தது.
‘பிரதமர் மோடி என்னுடைய மிகவும் நல்ல நண்பர். அவர் ஒரு ஜென்டில்மேன், அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவருக்கு விளக்கினேன். நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால், எங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாது என்று நான் சொன்னேன். அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும். இல்லை, நான் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். நாங்கள் அணு ஆயுதப் போரை நிறுத்தினோம்’ என்று டிரம்ப் கூறினார்.
US Prez Donald Trump
Ended India, Pakistan conflict ‘with a series of phone calls on trade’ & ‘it was getting very bad’
‘I had the general Pakistani General who was very impressive, he was in my office’
‘PM Modi is a great friend of mine, great gentleman..’ pic.twitter.com/BDVs5bQG7w
— Sidhant Sibal (@sidhant) June 25, 2025