வாஷிங்டன் : ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2330 GMT) தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய […]
லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் […]
வாஷிங்டன் : அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் ICE அதிகாரிகள் பெரிய அளவிலான சோதனைகளை நடத்தினர். இதில், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் புலம்பெயர்ந்தோரை கைது செய்து, ஆவணங்கள் இல்லாதவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும் அதிபரான பிறகு அரசு செலவுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டார். ஆனால், சமீபத்தில் தயாரான அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் மஸ்க்கின் குழு பரிந்துரைத்த எந்தவொரு மாற்றமும் ஏற்கப்படவில்லை. வரிச் சலுகைகள், ராணுவ செலவுகளுக்கு கூடுதல் நிதி, மின்சார வாகன மானியம் ரத்து போன்றவை மஸ்க்கை அதிருப்தி அடையச் செய்தன. இதனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் என்பது நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது. டிரம்பின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு எதிராக மஸ்க் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் உருவாகியுள்ளது. “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதவை குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் ஹவுஸில் நிறைவேற்றப்பட்டது. இது பொருளாதாரத்திற்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்று […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் தனது சிறப்பு சிவப்பு டெஸ்லா காரை விற்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலியாக மார்ச் மாதம் வாங்கிய தனது டெஸ்லா சிவப்பு காரை டிரம்ப் இனி பயன்படுத்த மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. […]
வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மிகப்பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அதை வெளியிட மறுக்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது பேசுபொருளாக வெடித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் மஸ்க், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி செய்து, அவரது வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆனால், இப்போது டிரம்ப், மஸ்க்குடன் பேச விருப்பமில்லை என்றும், அவரது நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் மஸ்க் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்து வந்தார். மஸ்க் தனது சமூக ஊடக தளம் மூலம் டிரம்பிற்கு ஆதரவாக ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தினார் மற்றும் பொது பேரணிகளில் கலந்து கொண்டார். இதற்காக மஸ்க்கிற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது மற்றும் அவருக்கு DOGE பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் டிரம்பின் லட்சியமான […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்தார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்தத் தடைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் விதிக்கப்பட்டவை. எந்தெந்த நாடுகள் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம். முழுமையான தடை உள்ள நாடுகள் (சிவப்பு பட்டியல்) ழுமையான பயணத் தடை (Red List) விதிக்கப்பட்ட 12 நாடுகள் ஆப்கானிஸ்தான், […]
ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன. 2022-ல் தொடங்கிய அவர்களது போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது இரு நாடுகளும் நேரடியாகப் பேசும் இரண்டாவது முயற்சியாகும். முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த மே 16, 2025 அன்று இதே இஸ்தான்புலில் நடந்தது. அப்போது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒரு சிறிய ஒப்பந்தம் மட்டும் ஏற்பட்டது. […]
வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பை நிறுத்திவைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என தடையை நீக்கியது மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த நடவடிக்கை, டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இயற்றப்பட்ட பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அறிவித்த ஒரு […]
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவர் ட்ரம்பின் பிரசாரத்திற்கு நிதி உதவி வழங்கியதுடன், அவரது நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, ட்ரம்ப் 2025 ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற பிறகு, அரசின் செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிர்வாகத்தை […]
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே 21 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு குற்றச்சாட்டால் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஏனென்றால், சந்திப்பின்போது, டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறினார். “இனப்படுகொலை” என்றால், ஒரு இனத்தை முறையாக […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்’ அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது 2029 ஆம் ஆண்டில் அவரது தற்போதைய பதவிக்காலத்தின் இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டிக், ஹைப்பர் சோனிக் ஏவுகனைகளை அழிக்கும் வல்லமை கொண்ட `கோல்டன் டோம்’ கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பே ரொனால்ட் ரீகன் (40வது அமெரிக்க ஜனாதிபதி) இந்த திட்டத்தை செயல்படுத்த […]