டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதில் ‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசில் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?’ போன்ற பரபரப்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. […]
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” […]
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் […]
டெல்லி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற NDA கூட்டணியின் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி மூத்த பாஜக தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் […]
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) தலைவரான அவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 68 வயதாகும் அவர், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விடுமுறையை கொண்டாட ஷாங்காய் சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. தற்போது, அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லீ கெகியாங்-க்கு நேற்று திடீரென […]
தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் […]
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் டெல்லியில் பதவியேற்றுக்கொண்டார். டிஒய் சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியில் இருப்பார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்றார். இதனிடையே, ஆதார் […]
தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு அதிகாரம் வழங்கி, இமாச்சல் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும் சோனியாவுக்கு இந்த தீர்மானம் உதவும் என கூறப்படுகிறது. இந்த தீர்மானம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் […]
குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்னுடைய கருத்தால் குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க தயார். குடியரசுத் தலைவரை அவமதிப்பது குறித்து என்னால் கற்பனையும் செய்ய முடியாது. குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, தவறுதலாக பேசிவிட்டேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம், […]
தேசத்தின் சுயமரியாதையை முதண்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா […]
நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வருகை தந்து பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்வின் போது குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவற்களின் பதவிக்காலம் வரும் (ஜூலை) 24ஆம் தேதி நிறைவடைகிறது. 25ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதற்காக குடியரசு தலைவர் தமிழகத்திற்கு விருது வழங்கியுள்ளார். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில்2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றடைந்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கான்பூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் […]
இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் […]
கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதாகவும், அது மட்டுமல்லாமல் இந்த கொரோனா […]
பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் […]
இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இன்று மாலை 7 மணியளவில் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்படும். இதனை அடுத்து ஆங்கிலத்தில் இவரது உரை ஒளிபரப்பப்படும். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய […]
வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான […]
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்ததற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கண்ணம்மாள், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.