டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது. டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று ஒரே நாளில் மாநாட்டில் பங்கேற்ற வந்த 45 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025