அபராதம் 1 கோடியை நெருங்குகிறது..ஊரடங்கை மீறி சுற்றிய 2,18,533 பேர் கைது.!

Default Image

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ஒரு கோடியை நெருங்குகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன.

அதுபோன்று தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை விதிகளை மீறியதாக 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts