#Breaking: சென்னையில் ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா.!

சென்னையில் ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று புதிதாய் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4895 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1,922 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும், 5699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025