#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.!

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், இன்ஸ்பெக்டர் பி.மணிகண்ட குமார் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவித்துள்ளனர். மூன்று பேரின் பணியை பாராட்டி குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உள்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025