பாதாள சாக்கடை மரணம் – மாநகராட்சி, நகராட்சியே பொறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு.

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என கூறியுள்ளது.

மரணங்கள் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவர் என தெளிவுப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு 3 வாரங்கள் கெடு விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts