கொரோனா வாரியர்ஸ்க்கு 50 லட்சத்திற்கான காப்பீடு திட்டம்.. அரசு முக்கிய தகவல்!

Default Image

சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், 23-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 24-ம் தேதிக்குப் பின் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் நம்மை காக்கின்றனர். இதனால் அவர்களை கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கொரோனாவுடன் தினமும் போராடும் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் நிலையில், சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில், கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம், கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் மூன்றாம் முறை கால அளவு வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 24-ம் தேதிக்குப் பின் புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts