உக்ரைனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் C-17 ரக விமானங்கள்..!

விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களையும் மீட்புப் பணிகளில் விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ‘ஆபரேசன் கங்கா’ மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஏர் இந்தியா’ ‘ஸ்பைஸ்ஜெட் ‘ விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களையும் மீட்புப் பணிகளில் விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது. இந்த ரக விமானத்தில் சுமார் 300 பேர் வரை பயணம் செய்ய முடியும். அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சி-17 ரக போயிங் விமானம் 4 என்ஜின் கொண்டது. மணிக்கு 830 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. சுமார் 80,000 கிலோ எடையை சுமந்துசெல்லக்கூடியது. இந்த விமானத்திற்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4.400 கி.மீ வரை செல்லலாம். இந்தியாவிடம் சி-17 ரக போயிங் விமானங்கள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025