கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுமணப்பெண் தற்கொலை…!

கடலூரில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்.
கடலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் ஒப்புதலுடன் கடந்த மாதம் ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது குறையாக இருந்த நிலையில், கழிவறை இருக்கும் வீட்டை ரம்யா தனது கணவரிடம் அறிவுறுத்தி பார்க்குமாறு புதுமணத் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரம்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து மயக்கமுற்ற நிலையில் ரம்யாவை மீட்ட குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரம்யாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025