ஒடிசா ரயில் விபத்து – பிரதமர் மோடி ஆலோசனை!

PMModi

ரயில் விபத்து தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ரயில் விபத்து தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மீட்பு பணிகள், நிவாரணம், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது, அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தை அடுத்து. இன்று நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு என ஜெ.பி.நட்டா தெரிவித்திருந்தார். பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்