ஜூன் 9-ல் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

MK Stalin

மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். பாசனத்துக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில், வரும் 9-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுத்துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்