ஜூலை 18ம் தேதி பாஜக எம்.பி. பிரஜ் பூஷன் ஆஜராக சம்மன்!

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஜூலை 18ல் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராக பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுவேன். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025