ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 474.46 புள்ளிகள் உயர்வு..!

இன்றைய வர்த்தக நாளில் 67,074 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 474.46 புள்ளிகள் உயர்ந்து 67,571 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 146.00 புள்ளிகள் உயர்ந்து 19,979 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,831 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,833 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.