நான் முதல்வன் திட்டத்தில் AI தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகள் அறிமுகம்.!

நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டம் மாணவ, மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களது திறன்களை வளர்த்து பயன்பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன்படி நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், டிரோன்கள் செயல்பாடு, சாட் ஜிபிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகளையும் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.