கோ ஃபர்ஸ்ட் விமான சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படவதாக அறிவிப்பு!

நிதி நெருக்கடியில் சிக்கிதவிக்கும் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் (Go First), தங்களது விமான சேவை ரத்து காலத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, விமான சேவை ரத்து ஆகஸ்ட் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோ ஃபர்ஸ்ட் (Go First) விமான சேவை மே 2 முதல் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதுவரை இந்நிறுவனம் 13வது முறையாக ரத்து செய்துள்ளது.
தொடர்ச்சியாக சேவை ரத்து செய்யப்பட்டு வந்தாலும், தற்போது செயல்பாட்டு காரணங்களால் ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. மேலும், அதில் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
Due to operational reasons, Go First flights until 18th August 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRjeD for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/2N15VBzOKO
— GO FIRST (@GoFirstairways) August 16, 2023