Aarilirunthu Arubathu Varai: ரஜினி நடிப்பில் இது தனி ரகம்! நோ ஆக்சன், நோ ஸ்டைல்..நின்னு பேசும் கதாபாத்திரம்!

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனித்துவ நடிப்பில் உருவான ‘ஆறிலிருந்து அறுபது வரை’ 1979 ஆம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த ஒரு பேமிலி ட்ராமா திரைப்படம். ரஜினியின் எந்தவித ஸ்டைலிலும் இல்லாமல், ஒருஎளிமையான மனப்பான்மை கொண்ட கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்திருப்பார்.
இன்றுடன் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ வெளியாகி 44 வருடங்கள் ஆகிறது, காலங்கள் கடந்தோடி சென்றாலும், ரஜினியின் மற்ற படங்களை காட்டிலும் இது ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் ரஜினியின் சாயல் ஒரு துளி கூட இருக்காது, இந்த படத்துக்கு முந்தய படமான ‘புவனா ஒரு கேள்வி குறி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, எஸ்.பி.முத்துராமன் ரஜினியை தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால், இதில் நடிக்க மறுத்த ரஜினிக்கு பதிலாக சிவகுமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், இயக்குனர் ரஜினியை சமாதானப்படுத்தி எப்படியோ நடிக்க சம்மதிக்க வைத்தார். அதுவரை ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரஜினி, அவ்வாறு இல்லாமல் அமைதியான ஏழையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இப்படி, பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்த இந்தப் திரைப்படம், சென்னை மிட்லாண்ட் திரையரங்கில் 25 வாரங்கள் அதாவது 150க்கு மேற்பட்ட நாட்கள் தாண்டி திரையிடப்பட்டது. இந்தப் படம் பின்னர் தெலுங்கில் ‘மகாராஜு’ என்றும், கன்னடத்தில் ‘பூர்ண சந்திரா’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், சங்கீதா, எல் ஐ சி நரசிம்மன், ஜெயா, சக்ரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிஏ ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயரிப்பில், பாபு ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த மூத்த மகனான (ரஜினிகாந்த்) சந்தானத்தின் வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. அவர் தனது வாழ்க்கையின் முதல் பாதியை, தன்னுடன் பிறந்த சகோதரி, சகோதரனின் கல்விக்காக இரவும் பகலும் உழைக்கிறார். இரண்டாவது பாதி அவர்கள் தன்னிடம் சண்டையிட்டு சென்று வசதியான வாழ்க்கையை அனுப்பிவைப்பது பார்க்கிறார், அதே நேரத்தில் கடனை வாங்கி கொண்டு அதை அடைக்கும் பொறுப்புடன் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்.
இந்த திரைப்படத்தின் கதைப்படி, ஒரு மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொண்ட ஒரு ஏழை குடும்பத்துடன் கதை தொடங்குகிறது. (ரஜினி) சந்தானத்தின் அப்பாவாக நடித்த தேங்காய் சீனிவாசன் தீடீரென்று மரணமடைவதால், குடும்பத்தின் மூத்த மகன் ரஜினிகாந்த் சிறுவயதிலேயே தனது குடும்ப பாரத்தை ஏற்கும் நிலை ஏற்படுகிறது. சந்தானத்துக்கு 2 தம்பிகள் ஒரு தங்கை. தந்தை இறந்தபின், அவர் வேலை செய்த நிறுவன முதலாளி சந்தானத்துக்கு வேலை தருகிறார்.
அதில் வேலைசெய்து கொண்டே, தம்பி தங்கைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்புக்காக வருமானத்திற்கு மேல் நிறைய செலவு செய்து விடுகிறார். சந்தானத்துக்கு பணநெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவரின் நண்பர் சோ.ராமசாமியும் அவரின் நிறுவன அச்சக முதலாளியும் உதவுகிறார்கள்.
பின்னர், சந்தானம் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உள்ள சங்கீதாவுடன் காதல் வலையில் சிக்க, அவரும் காதலிக்கிறார். ஆனால், தம்பி தங்கைகளுக்காக இவர் பணம் செலவு செய்ய நிலை வரும் என்பதாலும், இவரை திருமணம் செய்து கொண்டால் பணநெருக்கடிக்கிடையே வாழ வேண்டும் என்பதாலும் அவரது காதலை மறந்து விட்டு வேறொருவருடன் திருமணம் செய்து கொள்கிறார்.
இதை ஒரு பாரமாக ஏற்றிக்கொண்டு, வேலையில் கவனம் செலுத்தி தங்கை திருமணம் நடத்த பணமில்லாமல், ஒருவரின் சொல்லக்கேட்டு பணம் கிடக்கும் என்ற பேராசையில் ஏமாந்து திருமணத்தை முடித்துவைக்கிறார். இதை தொடர்ந்து, அவரது இரு சகோதர்களும் படிப்பை முடித்துக்கொண்டு வெளி ஊரில் வேலைக்கு செல்கின்றனர்.
என்னதான் வெளி ஊரில் நல்ல வேலை செய்து வந்தாலும், தங்களை கஷ்டப்பட்டு கடன் வாங்கி படிக்க வைத்த அண்ணன் சந்தானத்துடன், இருவரும் மனவருத்தம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதையடுத்து, சந்தானம் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி பக்கவாதம் வந்து, படுக்கையில் கிடக்க… முதலாளியின் மகன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். அவர் வங்கியை கடனை கொடுத்தால் மட்டுமே இங்கு வேலை என்று துரத்தி விடுகிறார்.
இப்படி, பல அடிமேல் அடி வாங்கி பல இன்னல்களை சந்தித்து ஒரு கட்டத்தில், முன்னேற தொடங்குகிறார். அப்போது, இதனை பார்த்த பிரிந்து சென்ற இரு சகோதர்களும் நல்ல பேர் எடுக்கும் சந்தனத்தை இது எங்க அண்ணன் இரு பெருமை கொள்கிறார்கள். இபப்டி ஒரு சண்டை கட்சிகளும் ரஜினியின் ஸ்டைல்களும் இல்லாமல், தனித்தவ நடிப்பை வெளிப்படுத்தியதால், ரஜினியின் படங்களின் மொத்த லிஸ்டில் இன்றும் தனியிடம் பிடித்திருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!
June 9, 2025