EPS : இபிஎஸ் எங்களை கிணற்றில் விழ சொன்னால் கூட நாங்கள் விழுவோம்.! எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேச்சு.! 

ADMK Chief Secretary Edappadi Palanisamy - SP Velumani

இன்று கோவையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளச்சி ஜெயராமன் என முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ஒரு கூட்டணிக்குள் இருந்து கொண்டு அந்த கூட்டணி கட்சியையே விமர்சித்து கருத்து கூற கூடாது. அம்மா (ஜெயலலிதா) பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை. அண்ணா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் பற்றி பேச அவசியமா? பேரறிஞர் அண்ணா பற்றி பேசலாமா.?

பெரியார் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுக தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் மாற்றத்திற்குள காரணம் அண்ணா தான். அவர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுவெளியில் தவிர்த்து இருக்க வேண்டும்.

நாங்கள் எப்போதும் கொள்கையில் கூட்டணி (பாஜக – அதிமுக ) வைத்துக்கொண்டது கிடையாது. தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. பாஜக ஆட்சியின் போது தான் காவேரி விவகாரம் தொடர்பாக 23 நாட்கள் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். விவசாயிகளுக்காக இதனை செய்தோம். எங்கள் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) அதற்கடுத்து எடப்படியார் தான். அவர் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட நாங்கள் குதித்து விடுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi