பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியவுக்கு 2-வது வெண்கல பதக்கம் ..! வரலாறு படைத்த மனு பாக்கர் ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர்.
நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. இன்றைய நாளில் இந்தியா அணியில் பதக்க போட்டியாக இந்த 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டி மட்டுமே நடைபெற இருந்தது. இதனால், இந்தியாவிற்கு 2-வது தங்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்ட்டது.
அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவுக்கு தற்போது 2-வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் மனு பாக்கர் தனி நபர் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் 2-வது பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார். மேலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற புதிய வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்துள்ளார்.
BRONZE MEDAL!!!!!
Incredible shooting from Manu Bhaker and Sarabjot Singh to win us our Second medal at @paris2024 Olympic Games. With this Manu also becomes the first Indian athlete to win 2 Olympic Medals in a single edition! #JeetKaJashn | #Cheer4Bharat | #IndiaAtParis24 pic.twitter.com/C6rIy3hNIj— Team India (@WeAreTeamIndia) July 30, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
June 3, 2025
35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!
June 3, 2025