இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி “முழுமையான மாஸ்டர்கிளாஸ்” என்று பாராட்டியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை 77/3 என்ற நிலையில் 510 ரன்கள் பின்தங்கிய நிலைக்கு தள்ளியது. இந்த அளவுக்கு இந்திய சிறப்பான ரன்களை குவிக்க காரணமே கில்லின் இந்தப் புரட்சிகரமான 269 ரன்கள் தான். இந்த இரட்டை […]
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். பர்மிங்காம் மைதானத்தில் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் கில்லின் முதல் இரட்டை சதமாகும். 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். நிதானமாக விளையாடிய கில் இங்கிலாந்து அணியின் பத்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய கில் டெஸ்ட் அரங்கில் […]
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025) மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்கிற வரலாறு சாதனை தான். இந்த அரிய சாதனையை முன்பு டான் பிராட்மன் (1938), கேரி சோபர்ஸ் (1966) மற்றும் முகமது அசாருதீன் (1990) போன்ற […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியின் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கும். அதே நேரத்தில், இங்கிலாந்து இதைப் பயன்படுத்திக் கொண்டு தொடரில் 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற முயற்சிக்கும். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். […]
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா […]
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட் உலகின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என்று புகழ்ந்து பேசினார். 2025 ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் (134 மற்றும் 118) அடித்து அசத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக (ஜூலை 2, எட்ஜ்பாஸ்டன்) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டோக்ஸ் […]
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனிடமிருந்து பெற்ற ஆலோசனைகளை குல்தீப் வெளிப்படுத்திய பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்தியா முதல் டெஸ்டில் 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், எட்ஜ்பாஸ்டனில் 2025 ஜூலை 2 அன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் குல்தீப் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குல்தீப், 2025 ஐபிஎல் […]
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி […]
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் […]
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். எனவே, அவர்கள் […]
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஜூன் 20-24 தேதிகளில் […]
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் […]
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவறவிட்டதற்காக ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த குறைபாடு, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுக்கவும், 371 ரன்கள் இலக்கை துரத்துவதில் வலுவான தொடக்கத்தைப் பெறவும் காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், “ஸ்லிப், கல்லி, லாங் […]
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை குறுக்கிட்டு விளையாட்டைத் தடை செய்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இது ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தை மூடுவதற்கு கவர் போர்த்தினர், மேலும் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். மழையின் […]
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இந்த தொடரில் இந்திய வீரர் ஜடேஜா தான் தங்களுடைய அணிக்கு தலைவலியாக இருப்பார் என தெரிவித்துள்ளார். ஊடகம் […]
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற, போட்டியின் நான்காவது நாளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆட்டம் முடியும் வரை, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக களத்தில் ஜாக் க்ரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 […]
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன் 20, 2025, லீட்ஸ்) அபாரமாக விளையாடி, உலகளவில் அரிய சாதனை படைத்தார். அது என்ன சாதனை என்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் பதிவானார். இதற்கு முன், 2001இல் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 மற்றும் 199 ரன்கள் எடுத்து இந்த […]
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் பீல்டிங் திறன் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள், குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை தவறவிட்டதை பிராட் விமர்சித்தார். “இங்கிலாந்து மைதானங்களில் கேட்ச்களை தவறவிட்டால், இந்தியாவால் […]