இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

RCB

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை.

பெங்களூர் அணிக்கு டெல்லி அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. குறிப்பாக, விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், பெங்களூர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் 33 ரன்கள் சேர்த்தனர். ஹேசல்வுட் போரெல் 11 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், மூன்றாவது இடத்தில் வந்த கருண் நாயரை யாஷ் தயாள் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

அவரால் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவரைத் தவிர, கே.எல். ராகுல் மூன்று பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார், ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்தார், கேப்டன் அக்சர் படேல் 15 ரன்களும், அசுதோஷ் சர்மா 2 ரன்களும், விப்ராஜ் நிகாம் 12 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது தவிர, யாஷ் தயாள் மற்றும் க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி சார்பில் அதிகபட்சமாக கோலி (51), க்ருனால் (73) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், குருணால் பாண்ட்யா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார்.

டேவிட் ஐந்து பந்துகளில் (19) ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஆர்சிபி அணி மகத்தான வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. டெல்லி தரப்பில் அக்‌ஷர் படேல் இரண்டு விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரஜத் படிதரின் தலைமையில், பெங்களூரு அணி 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றுள்ள டெல்லி, அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் விக்கெட் மற்றும் 73 ரன்கள் குவித்த குருணால் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்