இனிஅடிக்கடி சார்ஜ் செய்ய தேவையில்லை..! வந்துவிட்டது ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!

Published by
செந்தில்குமார்

ஹோண்டா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர், ஹோண்டா EM1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களிடையே பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அடிக்கடி பெட்ரோல் விலை உயருவதால், பலரும் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் சாய்ந்துள்ளனர். தற்போது பல சிறந்த மற்றும் பிரம்மாண்டமான மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

HondaEM1e [Image source : EVsInsider]

எனவே, பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தற்போது இ-ஸ்கூட்டர்களில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இப்போது ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் மின்சார வாகன உலகில் நுழைந்து, தனது மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா EM1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா EM1 பேட்டரி:

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை எலக்ட்ரிக் மொபெட் என்று அழைக்கிறது. ஹோண்டா ‘மொபைல் பவர் பேக் இ’ லித்தியம் அயன் பேட்டரி இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தியுள்ளது. இது தோராயமாக 10 கிலோ எடை கொண்டது. இதில் 1.47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய, நிறுவனம் 270W ஏசி சார்ஜரை வழங்கியுள்ளது.

EM1e [Image source : Twitter/@as_miyashita]
ஹோண்டா EM1 பேட்டரி நெட்வொர்க்:

இந்த சார்ஜர் மூலம், இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். பேட்டரி தீர்ந்து விட்டால் மாற்றக்கூடிய பேட்டரி நெட்வொர்க் வசதியின் மூலம் இரண்டாவது சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெறமுடியும். இதனால், இந்த ஸ்கூட்டரை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

EMIe EM1e [Image source : Twitter/@as_miyashita]

ஹோண்டா EM1 அம்சம் மற்றும் வேகம்:

ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 48 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ், கோம்பி பிரேக்கிங் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago