ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலையை 3% உயர்த்துகிறது கியா இந்தியா நிறுவனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

Kia India : ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கியா இந்தியா நிறுவனம், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்திய சந்தையில் புது புது மாடல்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் தனி இடம் கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கியா நிறுவனம் விரைவில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய 2024-25ஆம் நிதியாண்டு தொடங்குகிறது. அந்த சமயத்தில் கார்களின் விலைகள் உயர்த்துவதாக வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்தவகையில், கியா இந்தியா தனது அனைத்து மாடல் கார்களில் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3% உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, கியா செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் போன்ற கார்களின் விலைகள் உயரவுள்ளன. இந்த கார்கள் தான் சந்தையில் அதிக விற்பனையில் உள்ளது. எனவே, உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் விநியோகம் தொடர்பான செலவீனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago