இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி சேவையை வழங்குகிறது. இந்த கார் கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் நிறங்களில் வருகிறது.
இந்த கார் குறித்து அதன் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், இந்த கார் தனது பிராண்டின் தரத்தை நிலைநிறுத்தும் வகையிலான டிசைன், உள்கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. மேலும் இந்த கார் மிக குறைந்த விலையில் வருகிறது.
புதிய ரேபிட் மாடலில் சிறப்பு அம்சமாக டூயல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் வெளிவந்த ஸ்கோடா தயாரிப்புகளிலேயே அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் ரேபிட் ரைடர் உள்ளது. இதனுடன், பார்க்கிங் சென்சார், க்ளேர் அடிக்காத பக்கவாட்டுக் கண்ணாடி, டைமர் உடனான விண்ட்ஷீல்டு, உயரத்துக்கு ஏற்ப மாற்றப்படக் கூடிய சீட் பெல்ட் என அசத்துகிறது ஸ்கோடா ரேபிட்.
1.6 லிட்டர் மல்டி-பாயிண்ட் பெட்ரோல் பவர் என்ஜின் கொண்ட ஸ்கோடா ரேபிட் ரைடரின் திறன் 153Nm டாக் வெளியீட்டுடன் லிட்டருக்கு 15.41 கி.மீ மைலேஜ் தருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி, 4 ஆண்டுக்கான சாலையோர உதவி மற்றும் 4 ஆண்டுக்கான பராமரிப்பு சேவையை வழங்குகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…