மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், தற்போது இந்திய பங்குசந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…