குறைந்தது தங்கம் விலை.. நிம்மதி மூச்சு விடும் இல்லத்தரசிகள்! இன்றைய நிலவரம் என்ன.?

Published by
கெளதம்

சென்னை: கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.1680 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2000 மற்றும் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.3,100 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.96.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.96,500க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (23-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையானது. அதெ போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ. 97-க்கும், கிலோவிற்கு ரூ.3,300 குறைந்து ரூ.97,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

59 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago