Categories: வணிகம்

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2.50% உயர்வு.!

Published by
செந்தில்குமார்

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றமடைந்திருந்தாலும், மற்ற அனைத்து நாட்களிலும் இறக்கத்தில் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றது.

முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,975.61 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.50 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 79.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 31.00 அல்லது 0.49% உயர்ந்து ரூ.6,305 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (+2.50%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (+1.32%), இண்டஸ் இண்ட் வங்கி (+0.92%), மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (+0.81%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (+0.82%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெக் மஹிந்திரா லிமிடெட் (-0.98%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.65%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (-0.62%), சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-0.56%)
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

5 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

6 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago