வணிகம்

Stock Market: நாள் முடிவில் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.! 66,800.84 புள்ளிகளாக நிறைவு.!

Published by
செந்தில்குமார்

முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், இன்றைய வர்த்தக நாளில் 67,080 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 700 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 796.00 புள்ளிகள் சரிந்து 66,800.84 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி வர்த்தக நாளின் முடிவில் 231.90 புள்ளிகள் சரிந்து 19,901.40 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் ஆனது அறிவிக்கப்படவுள்ளது. அந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் முதலீட்டார்கள் தங்களது பங்குகளில் மாறுபாடுகளை செய்கின்றனர்.

இதனால் ஒரே இரவில், அமெரிக்க குறியீடுகள்0.3 சதவீதம் வரை சரிந்தன. அதோடு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆனது கடந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 93 டாலர் ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.இத்தகைய காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

40 minutes ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

59 minutes ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

2 hours ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

3 hours ago