வணிகம்

நாடு முழுவதும்  2 ஆவது நாளாக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தம் !

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும்  2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகின்றது. டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடி 3ஆம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும்  நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்,தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறுகையில், தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை […]

#ADMK 3 Min Read
Default Image

அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில்  டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம்  தொடங்கியது!

அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில்  டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம்  தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு..!வேலை நிறுத்தத்தால் விலைவாசி உயருமா?

தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடி 3ஆம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்,தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் […]

#ADMK 3 Min Read
Default Image

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆப்பு வைத்த திமுக ..!சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை…!உயர்நீதிமன்றம் கேள்வி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுகவின்  ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த பின்னர்   கொடுத்த புகாரை விசாரிக்க 3 மாதமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று  மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல்  ஓ.பி.எஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் […]

#ADMK 2 Min Read
Default Image

அரசின் கஜானாவில் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை சேர்க்க வேண்டும்!திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்

சட்டப்படி நியாயமான முறையில் வருமான வரி சோதனையையும்  தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்  அரசின் கஜானாவில் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை  சேர்க்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

சென்னை,அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனையில் ரூ.80 கோடி பறிமுதல்!

சென்னை,அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனையில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருன்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இன்றைய(ஜூலை 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய(ஜூலை 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: லிட்டருக்கு 11 காசு குறைந்து பெட்ரோல் விலை  ரூ.79.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்து ரூ.72.28க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இன்றைய (ஜூலை 13) பெட்ரோல் ,டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து மாறாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.54 காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.14 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

அரசின் வருவாய் உயரும் வகையில் புதுச்சேரியில் வியாபாரிகள் முறையாக வரிசெலுத்த வேண்டும்!முதல்வர் நாராயணசாமி

அரசின் வருவாய் உயரும் வகையில் புதுச்சேரியில் வியாபாரிகள் முறையாக வரிசெலுத்த வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,861 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டியால் ஏற்பட்ட இழப்புக்கு மத்திய அரசு ரூ.333 கோடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கோரி காங்கிரஸ் கட்சித் தலைவர் கடிதம்!

கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் கின்னஸ் அமைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் எழுதிய கடிதத்தில் ,பிரதமர் நரேந்திர  மோடி பொது மக்களின் வரிப்பணத்தில் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் பெயரை உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்.கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  கின்னஸ் பரிசு வழங்க வேண்டும் என ’கின்னஸ்’ அமைப்பிற்கு  […]

#ADMK 2 Min Read
Default Image

இன்றைய(ஜூலை 12) பெட்ரொல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து மாறாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.82காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை திரும்பப்பெற வேண்டும்!சித்தராமையா

கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில்  உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை கர்நாடக பட்ஜெட்டில் திரும்பப்பெற வேண்டும் என்று  கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

கிறிஸ்டி நிறுவனத்த்தில்  ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு?ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் பறிமுதல் ?

நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 5 நாட்களாக நடைபெற்ற  வருமானவரித்துறை  சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே  திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில்  கிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக வருமானவரிதுறையினர்  சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் 5 நாட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல்  தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பது தவறான கருத்து!மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார்

தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பது தவறான கருத்து என்று மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழகம் தொழில் செய்வதற்கான உகந்த மாநிலம் என்பதை தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.தமிழகத்திற்கே தொழில் முனைவோர் அதிகம் வருவது தமிழகத்திற்கே என்றும் கூறியுள்ளார். முன்னதாக  மத்திய அரசு தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் பட்டியலை நேற்று வெளியிட்டது.இந்த பட்டியலில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 15ஆம் இடம், ஆந்திர பிரதேசத்திற்கு முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது . […]

#ADMK 2 Min Read
Default Image

இன்றைய(ஜூலை 11) பெட்ரொல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

ரூ .125 கோடி நட்டத்தில்  டாஸ்மாக் !ஆய்வில் திடுக் தகவல் ..!

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு ஆய்வறிக்கையில் ரூ .125 கோடி நட்டத்தில்  டாஸ்மாக் இயங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 51 பொதுத்துறை நிறுவனத்தில் 34 நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றது. 2016-17ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.68.80 கோடி லாபத்தில் இயங்குகிறது .2015-16ல் ரூ .125 கோடி நட்டத்தில் இயங்கியது டாஸ்மாக் நிறுவனம் என்று  பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தையும்,கார்த்தி சிதம்பரத்தையும் ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கு இது தொடர்பாக தொடர்ந்தது.ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை […]

#ADMK 2 Min Read
Default Image

16 நாட்களாக அப்படியே இருக்கும் பெட்ரோல், டீசல்!இன்றைய பெட்ரொல், டீசல் விலை என்ன?

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வருகின்றது. நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை  இன்றும் அதே விலையில் தொடர்கிறது.இன்றைய  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

அதிகளவில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு வரவேற்பு!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் பொதுமக்களிடையே அதிகளவில் வரவேற்பு பெற்றுள்ளது  என்று  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக  ஏற்கனவே ரூ.25 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனம்..! பிரதமர் நரேந்திர மோடியும்,தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர்!

டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது. தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது.செல்போன் ஆலையை பிரதமர் மோடியும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image