‘மெர்சல்’ படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்து இப்படம் மாபெரும் வெற்றி படமாக இருந்தது . இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் 62-வது படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். அதில், ஒரு வேடம் மாற்று திறனாளி என்று கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். விஜய் ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் முதன்மை கதாநாயகியாக நடிப்பார்கள் என்றும், இன்னொரு நாயகியாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பார் […]
நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் “விசிறி” அஜித் – விஜய் ரசிகர்களை பற்றிய படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போல என கூறினார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை உண்டு பண்ணியது. இதனையடுத்து இந்து மதத்தை சார்ந்த பிரமுகர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இயக்குநரும் ,நடிகருமான விஜயின் […]
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளா டிக் டிக் டிக் 2018 ல் வெளியாக தயாராகி வருகிறது. இதனை அடுத்து தற்போது அவர், புதிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடங்க மறு படத்தில் அவர் கமிட்டாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு படபூஜையுடன் நேற்று துவங்கிவிட்டது. இப்படத்தை ரவியின் மாமியார் சுஜாதா தயாரிக்கிறாராம். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறாராம். இப்படத்திற்கு ‘அடங்க மறு’ என்னும் தலைப்பினை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தினை அடுத்து, ஜெய் அஞ்சலி ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘பலூன்’. இதில் இவர்களோடு ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம், புத்தாண்டு ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வருடத்தில் மக்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வில் ஒன்று நடிகை பாவனாவிற்கு நடந்த அநியாயம். அதற்கு காரணமான நடிகரும் தற்போது சிறையில் உள்ளார். பாவனாவிற்கும் அவரது நீண்ட நாள் காதலரும்,கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும் கடந்த மார்ச் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது, இவர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண விழாவும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் எளிமையான […]
தளபதி விஜயின் தந்தையும், தமிழ் திரைப்பட இயக்குனரான S.A.சந்திரசேகர், ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பதாக கூறியிருந்தார். இதனால் அவர் மீது நடச்வடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் சார்பாக நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, அவரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் அவரின் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார், என பல முறை அறிவிப்பு தந்தார் . ஆனால் போதிய முடிவு இன்னும் வெளிவரவில்லை. பல நிகழ்வில் தனது அரசியல் விவாதங்களை பல மேடையில் போர் வந்தால் பார்த்துகொள்வோம் என தெரிவித்தார் தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் அறிவு தெரிவிப்பார் என பல ரசிகர்கள் நினைத்தனர் . எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால் சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் […]
‘சென்னை 28’ படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் படம் ஆனா பார்ட்டி இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பெரும் பார்ட்டிக்காகக் களமிறங்கியுள்ளனர் தற்போது இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதிள்ளது .
நடிகை தமன்னா தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் விக்ரமிற்கு ஜோடியாக ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘குயின்’ இந்தி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தியில் ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. படத்தை மிலாப் ஜவோரி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிகை தமன்னாவுக்கு […]
மித்ரன் இயக்கத்தில், விஷால் தயாரித்து நடித்து கொண்டிருக்கும் படம் ‘இரும்புக்குதிரை’. இதில் சமந்தா நடிக்கிறார், யுவன் இசையில் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றியும், விஷால் பற்றியும் இயக்குனர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இப்படத்தின் கதையை முதலில் விஷாலிடன் சொன்ன போது, கதை பிடித்திருந்தால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கேட்டார். அதன் பிறகு கதை பிடித்துப் போக கதையில் நானே நடிக்கிறேன். ஆனால், வில்லனாக மட்டும் தான் நடிப்பேன் […]
ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. […]
சியான் விக்ரமின் “பத்து என்றத்துக்குள்ள” என்ற திரைப்படம்,இன்று அப்படமானது தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகயிருக்கிறது. இப்படம் ஒளிப்பதிவாளரும்,இயக்குனருமான “கோலி சோடா” விஜய் மில்டனால் இயக்கப்பட்டது.மேலும் இப்படத்தில் விக்ரமுடன் சமந்தா,ராகுல் தேவ்,முனீஸ்காந்த்,பசுபதி எனப்பலர் நடித்திருந்தனர்.மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இன்று அதிகரபூர்வமாக தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிகர் சார்லி நடித்துள்ளார். படம் பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும் ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கி பழகிவிட்டேன். தனது மிக எளிமையான நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது எளிமையும் எங்களது நட்பும் படத்தில் எங்களது கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
தற்போதுள்ள ஹீரோக்களில் பிஸியாக நடித்து வரும் ஹீரோக்களுள் விஜய் சேதுபதியும் ஒருவர். அவரது அடுத்த படமான ’96’ படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான 3 கெட்டப் நடிக்கிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ளார். இவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழ் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விதிப்பது ஏன்? 15வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் அரவிந்த் சாமி பேச்சு
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது முகநூல் […]
வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்காகவும் அடுத்தகட்ட நகர்விற்காகவும் வரும் டிச.26 முதல் 31ம் தேதி வரை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இதனால் விரைவில் போர் முரசு கொட்டி போர் நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எண்ணப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.