வாட்ஸ் ஆப் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் போர்கொடி உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான முக்கிய செயலியாக பேடிஎம். உள்ளது. தற்போது இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் கையில் எடுத்து அதற்கான சோதனை முயற்சியை இந்தியாவில் தொடங்கியது. ஆனால் இதில் லாக் இன் மற்றும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத […]
அமெரிக்க மக்கள் ஹுவேய் (Huawei) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது சீன தொலைத் தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் […]
பாதுகாப்புத் துறை அமைச்சகம் 7லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்குப் அனுமதி அளித்துள்ளது. முப்படைகளுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 7லட்சத்து 40ஆயிரம் துப்பாக்கிகள் வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் 15ஆயிரத்து 935கோடி ரூபாய்க்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதக் கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் […]
அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார். இந்த பணி நீக்க நடவடிக்கையால் அமேசானில் பணியாற்றும் எந்தப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.கடந்த ஆண்டில் இந்நிறுவனம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன், வட அமெரிக்காவில் மற்றொரு தலைமையகம் திறக்கவும் திட்டமிட்டது. ஆனால் கணினியில் குரல் மூலம் கட்டளையிடுவது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து வரும் நிலையில், இந்த ஆண்டு […]
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசு நலத்திட்ட பயன்களை வழங்க மறுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். டெல்லியில், மாநில தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாகவும், அத்தகைய நிகழ்வுகள் தொடரக் கூடாது என்றும் கூறினார். இதுவரை ஆதார் பெறாதவர்களை உடனடியாக வாங்குமாறு அறிவுரை கூற வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி அவர்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது […]
இண்டிகோ விமான நிறுவனம் எஞ்சின் கோளாறு காரணமாக A320 ரக விமானங்களில் மூன்றை, சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 69 முறை இண்டிகோ A320 ரக விமானங்களின் எஞ்சின்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கான விமான சேவையை இயக்கிவரும் நிலையில் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்தது. நடுவானில் எஞ்சின் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த முகமை கூறியிருந்தது. இதையடுத்து, A320 ரக விமானங்களில் மூன்றை மட்டும் […]
வங்கி சேவைகளை ஏப்ரல் மாதம் முதல் வீட்டில் இருந்தே பெறுவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி தனது சேவையை இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த வங்கியின் திட்டத்தின் படி, நாட்டின் மிகப் பெரிய நிதிப் பரிமாற்ற சேவையை இது மேற்கொள்ள உள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் தனது சேவையை இது விரிவுபடுத்த உள்ளது. தபால்துறையின் உதவியுடன் வீட்டு வாசலில் பணப் பரிமாற்ற சேவையை இது தொடங்கும். 17 கோடிக்கும் […]
மத்திய அரசை ஆதார் எண் இல்லாத காரணத்திற்காக எந்த ஒரு குடிமகனுக்கும், எந்த ஒரு சேவையும் நிறுத்தப்படக் கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பிய கடிதத்தில் மருத்துவம், மாணவர் சேர்க்கை, குடும்ப அட்டை போன்ற எந்த ஒரு அரசு சேவைக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால் குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் கோரியுள்ளது. அண்மையில் ஆதார் அட்டை இல்லாத பொதுமக்களுக்கு சேவைகள் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரான்சின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மாற்றிய பிரதமர் மோடி, அவரது நண்பருக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டதாக, குற்றம்சாட்டியிருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும், கர்நாடக மாநிலத்தில் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பெல்லாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கும், பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவித்தார். […]
நாமக்கல்லில் போலீசார் ஃபேஸ்புக்கில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 28 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது செல்போன் எண்ணுக்கு நபர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், பரமத்திவேலூர் பேருந்து நிலையதிற்கு தனியாக வரவேண்டும் […]
வரி ஏய்ப்பு புகார் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரிய காவல்துறையினர் சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து தென்கொரிய மதிப்பின் படி 820 கோடி வாண் (Won) -ஐ வரி ஏய்ப்பு செய்ததாக அவர் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு […]
போலீசார் சீனாவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். ஸெங்சவ் (Zengzhou) ரயில் நிலையத்தில் நான்கு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்தக் கண்ணாடியை அணிந்தபடி, குற்றவாளிகளைப் பிடித்து வருவதாக சீனாவின் பிப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை தெரிவிக்கிறது.இந்தக் கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது. அந்த உபகரணத்தில் ஏற்கனவே போலீஸ் சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது […]
வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது. வாட்ஸ் அப் பயன்பாட்டை […]
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய கருத்தை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், மேற்கோள்காட்டி வாதாடினார். நியூசிலாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தரவுகளை யாரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமோ, அவர்களே உலகத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு […]
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களைப் போன்று தமிழகத்திலும் கூகுள் மையம் அமைக்க கோரியிருப்பதாகத் தெரிவித்தார். இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னையில் இணையதளத் தொடர்பு பாதிக்காமல் தடுக்க […]
லண்டன் நீதிமன்றம், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் தற்போதும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு அண்மையில் ஈகுவடார் அரசு குடியுரிமை வழங்கிய நிலையில், லண்டனில் உள்ள வழக்கில், ஜாமீன் பெற்று, தப்பியது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அசாஞ்சே தரப்பு […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் 27 எஞ்சின்களைக் கொண்ட ராக்கெட்டை தயாரித்தது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றனர். சூரியக்குடும்பம் உள்ள இதே பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தூரத்தில் திராப்பிஸ்ட்-1(Trappist-1) எனும் கோள்களின் குடும்பம் கடந்த 2015ல் கண்டறியப்பட்டது. இக்கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், இவற்றில் பூமியில் இருப்பதைப் போன்றே பாறைகள், நீர் உள்ளிட்டவை இருக்கலாம் என தங்களின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளனர். பூமி தனது ஒட்டு […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய தயாரானது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் ராக்கெட்டை தயாரித்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்தது என கருதப்படும் ராக்கெட்டை தயாரித்து, உலக நாடுகளின் பார்வையை திரும்பி பார்க்க வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சி.இ.ஓ. எலன் மஸ்குக்கு விருப்பமான சிவப்பு […]
அக்னி-1 ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ராணுவத்தின் சார்பில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பலாசூரில் ((Balasore)) அப்துல் கலாம் தீவிலிருந்து காலை 8.30 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 15 மீட்டர் நீளம் கொண்ட அக்னி-1 ஏவுகணை 12 டன் எடை கொண்டதாகும். 1000 கிலோ வரை எடையை சுமந்து செல்லும். தரையிலிருந்து 700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். […]