alluarjun [File Image]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில், புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும், அல்லு அர்ஜுன் தற்போது வரவிருக்கும் பிளாக்பஸ்டர், ‘புஷ்பா 2: தி ரூல்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் போல் தெரிகிறது.
அட ஆமாங்க… அல்லு அர்ஜுனின் இரண்டாவது லுக் போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா ராஜ்’ கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமாக இருப்பது போல் தெரிகிறது. ஸ்டலிஷ் உடை மற்றும் கரடுமுரடான தாடியுடன், அவர் லாரி முன் நின்று கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறார். மேலும், படபிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புஷ்பா 2 படப்பிடிப்பிற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் பெரிய செட் அமைக்கப்ட்டுள்ளது. அங்கு தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. புஷ்பா 2 அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் புஷ்பா ராஜ் மீண்டும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் காதல் செய்கிறாரா, பகத் பாசில் உடன் ஆக்சன் கட்சிகளில் மிரட்டுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…