50-வது படம் பிளாக்பஸ்டர்! வசூலில் மிரட்டும் மகாராஜா!

Published by
பால முருகன்

மகாராஜா : விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, முனிஷ்காந்த், தேனப்பன் பி.எல்., நடராஜ சுப்ரமணியன், சிங்கம்புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  படம் பார்த்த அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை மட்டுமே கூறி கொண்டு வருகிறார்கள். படம் அருமையாக இருப்பதன் காரணமாகவே இந்த அளவுக்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. வரவேற்புக்கு ஏற்றது போல வசூலிலும், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியான இந்த மகாராஜா படம் முதல் நாளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 4 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் அவர்களுடைய 50-வது திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்று இல்லை. ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே 50-வது படம் வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் அவருடைய 50-வது படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

47 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago